மந்திரிமனை
யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக மந்திரிமனை காணப்படுகிறது இது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் சங்கிலி மன்னன் காலத்தின் மந்திரி ஒருவரின் இருப்பிடமாக இது காணப்பட்டதனாலேயே மந்திரிமனை எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது வடஇலங்கையில் யாழ்மாவட்டத்தில் யாழ்நகரில் யாழ்ப்பாணம் பருத்தித்துரையில் பிரதான வீதியில் சட்டநாதர் கோயிலின் மேற்கு புறத்தில் அமைந்துள்ளது. இதன் அருகாமையிலே நல்லூர் கந்தசுவாமி கோயிலும் அமைந்துள்ளது. புவியியல் நில அமைவு ரீதியாக இதன் ஆள்கூற்று 9 40’ 38.9 “ north , 80,02,09” east க்கும் இடையில் அமைந்துள்ளது. ஆய்வு செய்தோர் – பேராசிரியர் ப.புஸ்பரட்னம்,பேராசிரியர் போ.இரகுபதி,யாழ்பல்கலைகழக தொல்லியல் வட்டார மாணவர்கள் தொல்லியல் தினைகள ஆய்வாளர்கள் இவ்விடத்திற்கு செல்லும் பாதை - யாழபேருந்து நிலையம் – அங்கிருந்து வைத்தியசாலையூடாக 600 m பயணம் செய்து இடப்மாகவுள்ள யாழ்பருத்துறை வீதி ( AB 20) ஊடாக சென்று இடப்பக்கமாக திரும்பி 3.8 KM பயணம் செய்தால